வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது.
" alt="" aria-hidden="true" />
வேலூர் "ஓட்டல்கண்ணா" அனைவருக்கும் தெரியும்.வேலூர் மாநகரில் பல ஆண்டுகளாக சுவையான உணவுவகைகளை கொடுத்துவரும் உணவகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அதனை ஏற்று நடத்தும் நண்பர் பூமிநாதன் அவர்கள் தற்போதய ஊரடங்கில் தனது சிறப்பான சேவையாக,மக்களுக்காக பாடுபட்டுவரும் காவல்துறையினர்,துப்புறவு பணியாளர்கள் உள்பட பலருக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று தனது உணவகத்தின் சுவையான உணவு வகைகளை பரிமாறி வருகின்றார். வேலூர் நகரவாசி என்கின்றமுறையிலும் சட்ட உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் என்ற முறையில் நன்றியினை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவருக்கும்,உடன்இருக்கும் அவரது பணியாளர்களுக்கும்,அவரது உணவகங்களுக்கும் நமது ஆதரவை தொடர்ந்து தரவேண்டும்.அவரது உணவகங்கள் மென்மேலும் வளர்சி அடைய இறைவன் என்றும் துணை இருப்பார்.வாழ்க,வளர்க அவரது பொதுத்தொண்டு